இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக காலை 6 மணியில் இருந்து முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பலத்த சோதனைக்கு பிறகு அடையாள அட்டைகள் பரிசோதனை செய்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது.
தபால் வாக்குகள் பிரிக்கப்பட்ட இடத்தில் பாஜ முகவர்கள் 4 பேர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களை முன்புறம் அனுமதிக்காமல் நின்றதால், அவர்களிடம் அதிமுக முகவர்கள் தங்களை முன் வரிசையில் நிற்க அனுமதிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
The post திருப்பூரில் பாஜ, அதிமுக முகவர்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.