தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னிலையில் உள்ள இடங்களில் மட்டும் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் தேர்தல் முடிவுகளை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெறிச்சோடி காணப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. அவரது வீட்டுக்கு முன்பு 4 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவரை பார்க்க வந்த அதிமுகவினர் கூட, அவர்கள் வந்த வாகனத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
The post தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி: சேலம் நெடுஞ்சாலை நகர் வெறிச்சோடியது appeared first on Dinakaran.