மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அவற்றை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால், ஜூன் முதல் வாரம் அடுத்த சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் மே மாதத்திற்கான துவரம்பருப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. சில கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்பட்ட நிலையில், பாமாயில் வழங்கப்படவில்லை, பாமாயில் வழங்கப்பட்ட கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. எனவே, மே மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஜூன் மாதத்தில் அவற்றையும் சேர்த்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்காதவர்களுக்கு ஜூன் மாதம் முழுவதும் சேர்த்து வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.