- தமிழ் நகர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- கன்னியாகுமாரி
- நெல்லா
- தென்காசி
- டெனி
- திண்டுக்கல்
- ஈரோடு
- தின மலர்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. லேசான இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல் 30.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 10 மணிவரை கன்னியாகுமரி, நெல்லை , தென்காசி , தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.