×

பைக்கில் வீலிங் சாகசம்: 2 வாலிபர்கள் பரிதாப பலி

உடன்குடி: பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பைக்குகள் மோதியதில் பரிதாபமாக இறந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாதபுரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வந்த வாலிபர்கள் சிலர் திருச்செந்தூர் – நெல்லை ரோட்டில் நேற்று முன்தினம் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். சிலர் தாறுமாறாக பைக்கை ஓட்டிச் சென்றனர். அப்போது குரும்பூர் அருகே குலைக்கநாதபுரத்தில் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகள் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.

இதில் குலைக்கநாதபுரத்தைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (22), செந்தூர்பாண்டி மகன் பிரதீப்குமார் (23) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைக்குகள் மோதி உயிரிழந்த 2 பேரும் ஆறுமுகநேரியில் லோடு ஆட்ேடாவில் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த சம்பவத்தால் குலைக்கநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

The post பைக்கில் வீலிங் சாகசம்: 2 வாலிபர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Udangudi ,Katayan Perumal Sami temple ,Gulaikanathapuram ,Kurumpur ,Thoothukudi district ,
× RELATED பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி