×

கொடைக்கானலில் தொடர்மழை; கொட்டுது அருவிகளில் தண்ணீர்: சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து உற்சாகம்

கொடைக்கானல்: தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதுடன் புகைப்படம், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்பமும் நீடித்து வந்தது. கடந்த 5 நாட்களாக கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் துவங்கிய மழை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. இந்த தொடர் மழையால் கொடைக்கானலில் நிலவி வந்த வறண்ட நிலை மாறி இதமான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது.

மேலும் தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் வறண்டு காணப்பட்ட வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, லிரில் அருவி, எலிவால் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அருவிகள் முன் நின்று சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் மலைச்சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி, வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

The post கொடைக்கானலில் தொடர்மழை; கொட்டுது அருவிகளில் தண்ணீர்: சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul district ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து