×

அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், மதிய உணவுடன், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2024-25ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது.

இந்நிலையில் இதுவரை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 623, அரசு நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 61,142, அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 23,370, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் 25,119 பேர் என மொத்தம் 3 லட்சத்து 24,884 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 5 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,School Education Department ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...