×

சென்னை மெட்ரோ பணி காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ பணி காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இன்று இரவு 9 மணி முதல் 27ம் தேதி இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மவுண்ட் பூந்தமல்லி சாலையில் குடிநீர் பிரதான குழாய் மாற்றி அன்று அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

The post சென்னை மெட்ரோ பணி காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Water Board ,Metro ,Ambattur ,Thenampettai ,Kodambakkam ,Valasaravakkam ,Alantur ,Adyar ,Chennai Metro ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...