×

மக்காச்சோள கழிவில் தீ விபத்து

கெங்கவல்லி, ஏப்.23: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி ஆனந்த். இவரது விவசாய தோட்டத்தின் அருகில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். அதை தற்போது அறுவடை செய்து, மக்காச்சோளம் தட்டு கழிவுகள் கூட்டமாக குவித்து வைத்துள்ளனர். நேற்று மதியம், அந்த கழிவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ஆனந்த், கெங்கவல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, அருகேயுள்ள விவசாய தோட்டத்திற்கு தீ பரவாமல், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது. விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மக்காச்சோள கழிவில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Anand ,Amdambatti ,Dinakaran ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை