×

தேர்தல் விடுமுறை என்பதால் புதுக்கோட்டையில் வெறிச்சோடிய கடைவீதி

 

புதுக்கோட்டை, ஏப்.20: தமிழக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், வாக்குப்பதிவு நாளான நேற்று புதுக்கோட்டை நகர் பகுதிகளில் கீழ ராஜவீதி, மேல ராஜவீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளும் மூடப்பட்டதால் மதிய உணவு கிடைக்காமலும், தேநீர் அருந்த முடியாமலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதனிடையே, அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கின. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கியதாலும், சொந்த ஊர்களில் வாக்களிக்க பலர் பணிபுரியும் ஊர்களில் இருந்து பேருந்துகள் சென்றதால் வழக்கத்தை விட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

The post தேர்தல் விடுமுறை என்பதால் புதுக்கோட்டையில் வெறிச்சோடிய கடைவீதி appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு