×

பாஜ நிர்வாகிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம், ஏப். 20: ராஜபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆண்டாள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது பாஜவை சேர்ந்த 3 பேர் வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் பண்டல் பண்டல்களாக பூத் சிலிப்புகள் மற்றும் 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் இருந்தது.

விசாரணையில் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச்செல்வது உறுதியானது. இதையடுத்து சென்னையை சேர்ந்த பாஜ நிர்வாகி தமிழரசன், பாஜ ராஜபாளையம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் கார் டிரைவர் பட்டுசாமி ஆகியோர் மீது தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் பறக்கும்படையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

The post பாஜ நிர்வாகிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajapalayam ,Election Flying Squad ,Andal ,Thalavaipuram Puthur ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!