×

வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்

 

ஈரோடு,ஏப்.20: ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் வாக்குப்பதிவு இறுதி நேரமான 6 மணிக்கு பின், வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்களுடன், வாக்குச்சாவடியின் நுழைவு வாயில் கதவு தாழிடப்பட்டது. பின்னர், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்காளிக்க காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தார்.

இதில், சம்பத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் 25 வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, வாக்களிக்க கூடுதல் அவகாசம் செய்யப்பட்டது.  இதேபோல், கருங்கல்பாளையம், காசிபாளையம்,வீரப்பன் சத்திரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இறுதி நேரமான 6 மணிக்கு பிறகு வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் டோக்கன் விநியோகம் செய்து, வாக்களிக்க வாய்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Chief Polling Officer ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...