×

மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இருக்கிறார்கள்: -ஜவாஹிருல்லா எம்எல்ஏ

சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அரும்பாக்கம் குட் ஹோப் பள்ளிக்கூடத்தில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 100 சதவீதம் வாக்களிப்பு நடந்தது என்ற வரலாற்றை படைக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க இந்த அறப்போரிலே ஒவ்வொருவரும் வீரர், வீராங்கனையாக பங்கு கொண்டு வாக்களிக்க வேண்டும். இன்று இந்தியா முழுவமும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் சாரை சாரையாக வந்து இந்தியா கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள்.

The post மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இருக்கிறார்கள்: -ஜவாஹிருல்லா எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : India ,Jawahirullah ,MLA ,CHENNAI ,Humanity People's Party ,MH Jawahirullah MLA ,DMK alliance ,Arumbakkam Good Hope School ,Tamil Nadu ,India alliance ,Jawahirullah MLA ,
× RELATED இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர...