×

44 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் அதிகரிப்பு

சென்னை: 44 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 3 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளான வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலை 7 மணி முதல் 1 மணி வரை 28.51 சதவீதம் வாக்குகள் பதிவாகி மந்தமாக காணப்பட்ட நிலையில் பிற்பகல் வெயிலின் தாக்கம் குறைந்ததை அடுத்து வாக்காளர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் வடசென்னையில் – 64.26 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் நேற்று 69.26 சதவீதம் என 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 1980ம் ஆண்டிற்கு பின் அதாவது 44 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் இந்தாண்டு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி மத்திய சென்னையில் – 58.98 சதவீதம் பதிவாகிய நிலையில் நேற்று 61.76 சதவீதமும், தென்சென்னையில் 57.07 சதவீதம் பதிவாகிய நிலையில் நேற்று 67.82 சதவீதம் என இரண்டு தொகுதிகளில் 10 சதவீதம் வாக்குகள் அதிகரித்துள்ளது.

The post 44 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,North Chennai ,Central Chennai ,South Chennai ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...