×

அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி: பிரேமலதா அறிக்கை

சென்னை: அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என நம்புவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி: பிரேமலதா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK-DMK alliance ,Premalatha ,CHENNAI ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,AIADMK ,Edappadi ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்