×

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சம் இழப்பு: கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் உள்ள தனியார் லேஅவுட் பின்புறம் வசித்து வந்தவர் விஜயகுமார்(27). இவரது மனைவி சந்தியா(23). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதனிடையே, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். மேலும் அவர், அதிகளவில் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல், மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் கணவன், மனைவி இருவரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தியாவின் தாய் திலகவதி, கதவை தட்டி பார்த்தும், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.

The post ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சம் இழப்பு: கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Hosur ,Vijayakumar ,Paykepally ,Hosur, Krishnagiri district ,Sandhya ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்