×

இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது: வாக்கு செலுத்தியபின் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என தனது ஜனநாயக கடமை செலுத்திய பின் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில் பலரும் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய வாக்கை செலுத்த தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார். அதற்கு முன்னதாக வாக்குச்சாவடி மையத்தில் உள்ள பூத்தில் வாக்கினை செலுத்திய பின் அங்குள்ள அலுவலரை மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பொத்தானை குறித்து கேட்டார்.

பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது : இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க. இந்தியாவிற்கு எல்லா தேர்தலும் முக்கியமான குறிப்பாக இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ‘இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லியாச்சு’ என ஆங்கிலத்தில் கூறினார்.

The post இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது: வாக்கு செலுத்தியபின் கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Kamal Hassan ,Chennai ,People's Court Party ,Tamil Nadu ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்