×

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 468 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஸ்பிக்நகர், ஏப். 18: தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 468 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி எஸ்ஐ சுந்தரம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முள்ளக்காடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், தூத்துக்குடி நேசமணிநகர் ராமமூர்த்தி மகன் பொன் கற்பகராஜ் (33) என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இங்கு மொத்தம் 468 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து பொன் கற்பகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 468 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Spiknagar ,Tuticorin ,SI ,Sundaram ,Mullakkad ,Dinakaran ,
× RELATED அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே...