×

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்யபிரதா சாஹூ பேட்டி

சென்னை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேட்டி அளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனி யாரும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடாது. விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்டால் அபராதம் விதிக்கப்படும். மக்கள் அமைதியாக இருந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் ஆகும் எனவும் பேசியுள்ளார்.

The post வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்யபிரதா சாஹூ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Satyaprata Sahoo ,Chennai ,Tamil Nadu ,Chief Election Officer ,Chief Electoral Officer ,Puducherry ,Dinakaran ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...