×

திண்டுக்கல்லில் பரபரப்பு!: பரப்புரைக்கு சென்றபோது கள்ளத்தனமான மதுவிற்பனை குடோனை சிறைப்பிடித்த பாமக வேட்பாளர் திலகபாமா..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி பைபாஸ் அருகே செம்பட்டி சாலையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த இடத்திற்கே நேரில் சென்று பாமக வேட்பாளர் திலகபாமா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தேர்தலை ஒட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, திண்டுக்கல் புறவழிச்சாலை பழனி பைபாஸ் அருகில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மதுவிற்பனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது பரப்புரையில் ஈடுபட்டிருந்த திலகபாமா உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்குள் நுழைந்து கள்ளமது விற்றவர்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, கள்ளத்தனமாக மது விற்றவரை அறையில் வைத்து பூட்டிய திலகபாமா, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுகுறித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த குடோனை பூட்டி, விற்பனையாளர் சேகர் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, அவரை திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டுக்கல்லில் பரபரப்பு!: பரப்புரைக்கு சென்றபோது கள்ளத்தனமான மதுவிற்பனை குடோனை சிறைப்பிடித்த பாமக வேட்பாளர் திலகபாமா..!! appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Thilakabama ,Dindigul ,BMC ,Thilak Bama ,Sempatti Road ,Palani Bypass ,Bama ,Dinakaran ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...