×

5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு நீடிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் இயல்பைவிட 2-3 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதிபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை ஈரோடு, சேலம் பகுதிகளில் 104 டிகிரி பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 97 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரியும் பதிவாகியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. பாபநாசம் 60மிமீ, சேரன்மாதேவி, திருச்செந்தூர் 30மிமீ, குலசேகரப்பட்டினம், போடி நாயக்கனூர், காயல்பட்டினம் 10மிமீ மழை பெய்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வெப்பநிலையை பொருத்தவரையில் 5 நாட்களுக்கு படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரும். உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் 100 முதல் 106 டிகிரி வரை வெயில் இருக்கும்.

The post 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Erode ,Salem ,Meenambakkam ,Nungambakkam.… ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில்...