×

வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது வெயில்.. ஆனாலும் களமாடு..! தொண்டர்களுக்கு ராமதாஸ் லெட்டர் மேல லெட்டர்

பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: இன்னும் விழிப்புடனும், துடிப்புடனும் நீ களமாட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் வெப்பநிலை சுட்டெரிக்கிறது. இந்த வெயிலில் பாட்டாளிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். வெந்நீரில் குளித்தது போன்று உடல் நனைகிறது. வேறு வழியில்லை. தமிழ்நாட்டைக் காப்பாற்ற இந்த சிரமங்களை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். அறுவடை செய்த நெல் கதிர்களை அடித்து, நெல்லைப் பிரித்து மூட்டைகளாகக் கட்டி வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வரை விவசாயிகள் எப்படி விழிப்புடன் பணியாற்றுவார்களோ, அதேபோல், நீயும் வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வரை விழிப்புடன் பணியாற்ற வேண்டும். உனது உழைப்பால் நாமும், நமது கூட்டணிக் கட்சிகளும் வெல்வது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது வெயில்.. ஆனாலும் களமாடு..! தொண்டர்களுக்கு ராமதாஸ் லெட்டர் மேல லெட்டர் appeared first on Dinakaran.

Tags : Ramdas ,BAMA ,Ramadoss ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு