×

தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி விட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாது : தேர்தல் ஆணையம்

சென்னை : தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி விட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சேர்க்க கோரி கேத்ரின் மார்டின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின் போது, தற்போது தபால் வாக்குகள் தொடங்கி விட்டதால் இனி பெயரை சேர்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

The post தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி விட்டதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாது : தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,CHENNAI ,Chennai High Court ,Kathryn Martin ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...