×

“ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர், தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்”: பரமக்குடியில் ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம்: ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர், தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் செய்தார். ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரமக்குடியில் 3 கி.மீ. வாகன பேரணி நடத்தி ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் இரு புறங்களிலும் பா.ஜ.க.வினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.

திரண்டு இருந்த மக்களை நோக்கி கையை அசைத்தவாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரித்தபடி ஜே.பி.நட்டா வாகனத்தில் சென்றார். ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தொடர்ந்து, வாகன பேரணியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவருக்கு மக்கள் ஆதரவு நல்க வேண்டும். மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அனுப்ப நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்பது தெரிகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க முடியும். ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் கொடுக்கக் கூடிய ஆட்சியாக மோடி அரசு உள்ளது. ஏழைகளுக்கு வீடு, மருத்துவக் காப்பீடு உள்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ரேசன் கடைகளில் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும் பருப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார் என குறிப்பிட்டார். தமிழகத்திற்கு 4 மடங்கு அதிகமாக ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ளது எனவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார். பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து, காந்தி சிலை வரை ரோடு ஷோ நடத்தப்பட்டது. அவரது வருகையை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

The post “ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர், தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்”: பரமக்குடியில் ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Tamil Nadu ,JP Natta ,Paramakkudy ,Ramanathapuram ,BJP ,National President ,Paramakkudy, Ramanathapuram district ,Paramakkudi ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்