×

பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு

மணப்பாறை, ஏப்.16: மணப்பாறை அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவன் மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை நோக்கி டிரைவர் முருகானந்தம் (58) என்பவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அதே திசையில் இருசக்கர வாகனத்தில் கஸ்பா பொய்கைபட்டியை சேர்ந்த அருண்குமார் (36), அவரது மனைவி தமிழரசி (32) மற்றும் அவர்களின் இரு குழந்தைகளுடன் மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழரசிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சண்முகம் மற்றும் குழந்தைகள் லேசான காயமடைந்தனர் . உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Manapara ,Pudukkottai District Viralimala ,Trichy District ,Manapara Murukanandam ,
× RELATED மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!!