×

தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மருத்துவ பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணியின்போது, உயிரிழந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வாரம் தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 14 முதல் 20ம் தேதி வரை நடக்கும் நிகழ்வுகளில், ‘தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்’ என்ற தாரக மந்திரத்துடன் தினமும் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த வகையில், மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் தலைமையில், தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு காயமடைந்தோருக்கு முதலுதவி, வெள்ளத்தில் இழுத்துச் செல்வோரை காப்பாற்றுவது, அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, சமையல் எரிவாயு கசிந்து தீப்பற்றினால் தற்காத்து கொள்வது குறித்து மாமல்லபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மருத்துவ பணியாளர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Fire Charity Week ,Mamallapuram ,Tamil Nadu Fire and Rescue Department ,
× RELATED தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு...