×

நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆண்டுவிழா

தஞ்சாவூர், ஏப்.15: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் 25 ஆண்டு தொடக்க விழாவும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் 25 ஆண்டு தொடக்க விழா. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தஞ்சாவூர் மானேச்சன்பட்டியில், மாவட்ட துணை செயலாளர் சசிக்குமார் தலைமையில் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகர் செயலாளர் மணிகலையரசன் வரவேற்புரை ஆற்றினார். அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து சங்கத்தின் 25 ஆண்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் கேசவன் மாவட்ட அமைப்பாளர் ரவி மாதவன், மாவட்ட துணை தலைவர் ஜான்போஸ்கோ, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சுப்பிரமணியம், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் மகேஸ் காளிமுத்து பாபநாசம் ஒன்றிய தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சாலை வசதிகள், பேருந்து வசதிகள், கிராமத்தில் பொதுநூலகம் அமைக்க வேண்டும், வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Tags : Declining Farmers Union ,Thanjavur ,Tamil Nadu Weak Farmers Association ,Ambedkar ,Tamil Nadu Nalivuruta Kiyar Sangam ,Revolutionary ,Declining Farmers' Union ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...