×

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன

கரூர், ஏப். 15: தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை வீரர்கள் பணியில் இருக்கும் போது வீர மரணம் அடைந்த தினத்தை தீதொண்டு தினமாக தீயணைப்பு துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர். உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தீதொண்டு தினமாக கடைபிடித்து இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதேபோல் நேற்றும் தமிழக முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் வடிவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உலக தீயணைப்பு தினத்தை தீதொண்டு தினமாக கடைப்பிடித்து நேற்று காலை வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...