×

பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகோரம் கைதானார். அகோரத்துக்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறை வாதம் வைத்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளதால் அகோரத்துக்கு ஜாமின் தரக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை எதிர்ப்பை அடுத்து மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP Madras High Court ,Agoram ,Chennai ,BJP ,Madras High Court ,Administrator ,Adinath ,Mayiladuthurai ,Darumapuram ,Agorat ,Dinakaran ,
× RELATED தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல்...