×

கோடை சீசன் நெருங்கியது தங்கும் விடுதிகள், படகுகள் சீரமைப்பு பணி மும்முரம்

ஊட்டி : கோடை சீசன் நெருங்கிய நிலையில் சுற்றுலா துறை, தனியார் நிறுவனங்கள் மேம்பாட்டு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. மலை மாவட்டமான நீலகிரிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும், கோடை சீசனான மார்ச் மாதம் முதல் மே மாதம் முடியும் வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளால் நீலகிரி மாவட்டமே தினறும். சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், பஸ் நிலையங்கள், ஊட்டி – கோவை சாலை, சுற்றுலா தலங்கள் செல்லும் சாலைகள் என எங்கு பார்த்தாலும் வாகனங்கள் மற்றும் மக்கள் கூட்டமே காட்சியளிக்கும்.

குறிப்பாக, அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடும் அவதிப்படுவது வாடிக்கை. நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபாதைகள், விளையாட்டு சாதனங்கள், படகுகள், இருக்கைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. படகு இல்லத்தில் பழுதடைந்த படகுகள் சீரமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை தற்போது மேம்பாட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல், பல்வேறு தனியார் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவைகளும் சீரமைக்கும் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து தனியார் காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் போன்றவைகளும் புதுப்பிக்கும் பணிகளில் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோடை சீசன் நெருங்கியது தங்கும் விடுதிகள், படகுகள் சீரமைப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Mumbai ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...