×

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு கடிதம்

 

கரூர், ஏப். 6: 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் இம்மாதம் 19 ம் தேதி அடுத்த மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் 100சதவீதம் வாக்கு பதிவு அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் இந்திய மக்களவைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும், அந்த வாக்கினையும் எந்தவித அன்பளிப்பும் பெறாமல் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டும் என தங்களுடைய பெற்றோர்களுக்கு கடிதம் வாயிலாக நேற்று 280 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்தினர்.

The post 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Govtampalayam Government School ,India ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...