மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, இத்தாலி வீரர் யானிக் சின்னர் தகுதி பெற்றார். அரையிறுதியில் ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் (28 வயது, 4வது ரேங்க்) உடன் மோதிய சின்னர் (22 வயது, 3வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் பல்கேரியா வீரர் கிரிகோர் திமித்ரோவ் (32 வயது, 12வது ரேங்க்), ஜெர்மனி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (26 வயது, 5வது ரேங்க்) மோதினர். 2 மணி 37 நிமிடங்களுக்கு நீடித்த இப்போட்டியில் திமித்ரோவ் 6-4, 6-7 (4-7), 6-4 என்ற செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் பைனலில் சின்னர் – திமித்ரோவ் மோதுகின்றனர்.
The post மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் சின்னர் appeared first on Dinakaran.