×

ஆரல்வாய்மொழி அருகே விபத்து வீட்டுக்குள் புகுந்த டாரஸ் லாரி, டிராக்டர்

ஆரல்வாய்மொழி : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கங்காராஜ் மகன் காளைச்சாமி (31). டிரைவர். இவர் நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி டாரஸ் லாரியை ஓட்டி வந்தார். வெள்ளமடத்தை அடுத்த லாயம் விலக்கு அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

மேலும் அருகே உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து உள்ளே புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மற்றும் பைக் மீதும் மோதி நின்றது. மேலும் டாரஸ் லாரி மோதிய டிராக்டர் வீட்டின் பில்லர் மீது மோதி நின்றது. இந்த திடீர் விபத்தால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்தபடியே வெளியே ஓடி வந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய டாரஸ் லாரியை காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் லாரி டிரைவர் காளைச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆரல்வாய்மொழி அருகே விபத்து வீட்டுக்குள் புகுந்த டாரஸ் லாரி, டிராக்டர் appeared first on Dinakaran.

Tags : Aralvaimozhi ,Taurus ,Kalaichami ,Gangaraj ,Virudhunagar district ,Nagercoil ,Vellamadatta ,
× RELATED ரிஷபம்