×

பூக்கடை பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 3 மணி நேரம் போராடி தீயணைப்பு

தண்டையார்பேட்டை: பூக்கடை பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 4வது மாடியில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை பூக்கடை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் எலெக்ட்ரிக்கல் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த கடையில் திடீர் தீ பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி எஸ்பிளனேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 5 மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீ அணைக்கப்பட்டது. 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் எலெக்ட்ரிக்கல் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு கார ணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் பூக்கடை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post பூக்கடை பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 3 மணி நேரம் போராடி தீயணைப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Pookadai ,Chennai Florist ,Govindappanayakan Street ,Dinakaran ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு