×

கும்பகோணம் அருகே ஆரியச்சேரி அரசு பள்ளியில் முப்பெரும் விழா

 

கும்பகோணம், மார்ச்29: கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் ஒன்றியம், ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கீரனூர், பருத்திச்சேரி, செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மேகலா வரவேற்றார். கீரனூர் ஊராட்சி தலைவர் பால திரிபுரசுந்தரி தனசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சாரநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர்.

திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நிவேதா வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை அமுதா ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கான திறனறிவு போட்டி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், நாடகம் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சிகளை சிறப்பாக மாணவர்கள் செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிறைவாக அரசு பள்ளிக்கு தொண்டுள்ளத்தோடு உதவிய புரவலர்களுக்கும், பள்ளி வளர்ச்சிக்கு உதவிய அனைத்து அரசியல் கட்சி மற்றும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிக்கான பரிசு பொருட்கள் அனைத்தையும் கொடுத்து உதவிய ஆரியச்சேரி கீழத்தெரு, ஜீவா நகர், கீரனூர் மணவெளித் தெரு, நாட்டாண்மை, கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் பள்ளி ஆசிரியர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

The post கும்பகோணம் அருகே ஆரியச்சேரி அரசு பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : triple ,Ariyacherry Govt School ,Kumbakonam ,Kiranur ,Paruditcherry ,Semmangudi ,Thiruvidaimarudur Union ,Ariyacherry Panchayat Union Middle School ,Ariyacherry government school ,triple celebration ,Dinakaran ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...