×

அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற பாடுபட வேண்டும்: திருவெண்காடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

 

சீர்காழி, மார்ச் 29: அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று திருவெண்காட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை வகித்தார் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி சீர்காழி ஒன்றியக் குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்று பேசினார் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து வேட்பாளர் சுதா தன்னை அறிமுகம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி நிர்வாகிகள் துரைராஜன், தேசப்பன், முத்துக்குமரன், பழனிவேல் ரவிச்சந்திரன் ஜீவராஜ் சேது ரமேஷ், சிவப்பிரகாசம் முத்தமிழ்ச்செல்வன் சிலம்பு சங்கர், தினகரன் வெங்கடேசன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நாக பிரகாஷ் நன்றி கூறினார்.

The post அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற பாடுபட வேண்டும்: திருவெண்காடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,THIRUVENKADU ,Thiruvengat ,EAST UNION ,THIRUVENKAT ,MAYILADUDURA DISTRICT ,SIRGAZHI ,Timika ,Thiruvengadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...