×

சீர்காழியில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணி

 

சீர்காழி, மார்ச் 29: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் கோயில் பள்ளிவாசல் தெருவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சீர்காழி தாசில்தார் இளங்கோவன் தலைமை நடைபெற்றது பேரணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஆரோக்கிய அன்னை பாரா மெடிக்கல் காலேஜ் மாணவிகள் இணைந்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் தொடர்ந்து பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் தேர்தல் தனி தாசில்தார் ரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பாளர் லயன்ஸ் சக்திவீரன், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Tahsildar Ilangovan ,Pallivasal Street, Mayiladuthurai district ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்