×

அரசு பஸ் மோதி இன்ஜினியர் பலி

குளத்தூர், மார்ச் 29:பனையடிஏந்தலை சேர்ந்த இருளன் மகன் குருசாமி(34). சிவில் இன்ஜினியரான இவர், ஓட்டப்பிடாரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவி மற்றும் லிதுஷா என ஒரு குழந்தை உள்ளது. குருசாமி தினமும் பனையடிஏந்தலில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு பைக்கில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வைப்பாரை அடுத்த கலைஞானபுரம் விலக்கு பகுதியில் எதிரே வந்த அரசு பஸ்சும், பைக்கும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குருசாமி பலத்த காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் குருசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே குருசாமி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பஸ் மோதி இன்ஜினியர் பலி appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Kuruswamy ,Irulan ,Panaiyatiendal ,Ottapidaram ,Punita ,Litusha ,Guruswamy ,Panayiyadiendal ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா