×

தச்சமொழி அபாய வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

சாத்தான்குளம், மார்ச் 29:சாத்தான்குளம் தச்சமொழி அபாய வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தான்குளம் சிஎஸ்ஐ வேதக்கோவில் முன்பிருந்து முதலூர் சாலை வழியாக அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இதில் தச்சமொழி வளைவில் வாகனங்கள் அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இந்த வளைவில் குடியிருப்பு வீடுகள், ஓட்டல்கள் உள்ளன. இந்த வளைவு குறுகலான வளைவு என்பதால் எதிர் எதிரே வாகனங்கள் வருகையில் தெரியாமல் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. அதிவேகமாக வந்து திரும்பும் வாகனங்களால் குழந்தைகள், பெரியோர்கள் பாதிப்படையும் சூழலும் உருவாகி உள்ளது. எனவே பெரும் விபத்து நிகழும் முன் நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து தச்சமொழி வளைவில் இருபுறத்திலும் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்மகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post தச்சமொழி அபாய வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Tachamozhi ,Chatankulam ,Thachamozhi ,Satankulam CSI Veda Temple ,Mudalur Road ,Dinakaran ,
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது