×

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் – 2024 முன்னிட்டு, தேர்தல் பணிகள் குறித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லச்சிவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார், அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆதிதிராவிட நலக்குழு சம்பத், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் மூலம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் வக்கீல்கள் சீனிவாசன், முனுசாமி, கார்த்திகேயன், பனப்பாக்கம் ராஜேஷ், விஜயபிரசாத், முகம்மது மொய்தீன், சிவாஜி, ஜமுனா அப்புன், சிவசங்கர், ஜெ.வேலு, டில்லிசங்கர், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Oothukottai ,Ellapuram North Union ,Lachivakkam village ,Oothukottai, Tiruvallur East District ,Thiruvallur Parliamentary Constituency Election ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி