×

தூத்துக்குடியில் வாலிபர் மீது மதுபாட்டிலால் தாக்குதல்

தூத்துக்குடி, மார்ச் 28: தூத்துக்குடி சுனாமி காலனி, கோமஸ்புரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சந்தானராஜ்(25). இவரது நண்பர் சுடலைராஜ். நேற்று முன்தினம் இவர்கள், சுடலைராஜின் நண்பர்கள் ரமேஷ், மாரிச்செல்வம், பிளேட், மந்திரம் ஆகிய 4 பேருடன் சேர்ந்து பூப்பாண்டியாபுரம் டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். அப்போது இவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுடலைராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து சந்தானராஜை மதுபாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சந்தானராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் தாள முத்துநகர் எஸ்ஐ ராஜாமணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post தூத்துக்குடியில் வாலிபர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,Murugan ,Santanaraj ,Gomaspuram, Tuticorin Tsunami Colony ,Sudalairaj ,Ramesh ,Marichelvam ,Blade ,Mandram ,Tasmac ,Bhupandiapuram ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...