×

சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

சென்னை: சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரனூரில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் ரூ.45 முதல் 200 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

The post சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Highways Commission ,Baranur ,Atur ,Baranoor ,
× RELATED நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில்...