×

நேற்று 7 பேர் மனு தாக்கல் விருதுநகர் தொகுதிக்கு இதுவரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று கடைசிநாள்

 

விருதுநகர், மார்ச் 27: விருதுநகர் தொகுதியில் நேற்று 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இதுவரை 18 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ல் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசிநாள். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் நாளான மார்ச் 20ல் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

மார்ச் 21ல் தமிழக மக்கள் நலக் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் முத்துக்கண்ணு முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் மணிக்கம்தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கௌசிக், பாஜ மாற்று வேட்பாளராக சரத்குமார், காங்கிரஸ் மாற்று வேட்பாளர் மணிகண்டன், பகுஜன் திராவிடர் கட்சி வேட்பாளர் பழனிச்சாமி, பாண்டியம்மாள்(சுயே), வெங்கடேஸ்வரன்(சுயே), சேகர்(இந்து சமாஜ் பார்டி கட்சி) என 10 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று ஜெயராஜ்(சுயே), செல்வி(சுயே), ராஜேஷ்(சுயே), அழகர்சாமி(தேமுதிக மாற்று வேட்பாளர், கடந்த 2019 தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர்), வி.வி.செல்வராஜ்(சுயே), மாயக்கண்ணன்(சுயே), சுரேஷ்(பகுஜன் சமாஜ் கட்சி) என 7 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை விருதுநகர் தொகுதிக்கு 18 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நேற்று 7 பேர் மனு தாக்கல் விருதுநகர் தொகுதிக்கு இதுவரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று கடைசிநாள் appeared first on Dinakaran.

Tags : Virudhu Nagar ,Virudhunagar ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...