×

வீடு புகுந்து கொள்ளை: 6 பேருக்கு 7 ஆண்டு சிறை

 

சிவகங்கை, மார்ச் 27: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுந்தரம். இவர் வீட்டில் கடந்த 2020 ஜூலை 22 அன்று மதுரை மாவட்டம் கீழவளவு அருகே கருவிபட்டியை சேர்ந்த மொட்ட கோபுரத்து ராஜா (23), அதே பகுதியை சேர்ந்த முத்துராமு (31), ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரைச் சேர்ந்த பிரித்விராஜ் (26), கோட்டை ராஜா (20), பாலகுமார் (27), இளம்பரிதி (26) ஆகிய 6 பேரும் வீட்டின் சுவர் ஏறி குதித்து 18 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடி சென்றனர்.

இதுகுறித்த புகாரில் எஸ்.வி.மங்களம் போலீலீசார் 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை தலைமை குற்றவியல் நீதிபதி சுந்தர்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post வீடு புகுந்து கொள்ளை: 6 பேருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Nagasundaram ,Marutipatti ,Singampunari ,Motta Gopurathu Raja ,Akuripatti ,Keezhavalu, Madurai district ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி