×

மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநரை தாக்கியவர்கள் கைது

மதுரை, மார்ச் 27: மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை, விளாங்குடி, சொக்கநாதபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கண்ணன் (30). மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், செக்கானூரணியைச் சேர்ந்த பரத் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக, இருவருக்கும் இடையே பல முறை வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், அரசரடி, தண்ணீர் தொட்டி அருகே வைத்து, பரத், அவரது பெரியப்பா மகன்களான உசிலம்பட்டி, கொக்குளத்தைச் சேர்ந்த கதிரவன் (30) மற்றும் செங்கதிரவன் (28) ஆகியோர் கண்ணனை உருட்டு கட்டை மற்றும் கல்லால் தாக்கி காயப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளனர். இது தொடர்பாக, கரிமேடு காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து பரத், கதிரவன் மற்றும் செங்கதிரவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநரை தாக்கியவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kannan ,Vilangudi ,Sokkanathapuram ,Sekanurani ,Dinakaran ,
× RELATED மதுரையில் இளைஞர் வெட்டிக் கொலை..!!