×

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக வேட்பாளர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்

திருச்சி, மார்ச் 26: திருச்சி மாநகராட்சி 47வது வார்டு மாமன்ற உறுப்பினராக அமமுகவை சேர்ந்த செந்தில்நாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறது.இக்கூட்டணி சார்பில் திருச்சி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் வேட்பாளராக திருச்சி மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்நிலையில் வேட்பாளர் செந்தில்நாதன் தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலையில், மேயர் அன்பழகனிடம் நேற்று வழங்கினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக வேட்பாளர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் appeared first on Dinakaran.

Tags : AAMK ,Trichy ,Senthilnathan ,AAMUK ,Trichy Corporation ,BJP ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...