×

செட்டிகுளத்தில் மின்மாற்றி அருகே தீ விபத்து

நாகர்கோவில், மார்ச் 26 : நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் எதிரே காலிமனை உள்ளது. இந்த காலிமனையில் புல்புதர்கள் மண்டி உள்ளது. காலிமனை முன்பு மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அந்த காலிமனையில் உள்ள புல் புதர்களில் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மின்மாற்றியில் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. மின்மாற்றியில் தீ பிடித்தால் பெரிய விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்விநியோகத்தை நிறுத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அதிகாரி துரை தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று புல்புதர்களில் பிடித்த தீயை அணைத்தனர்.

The post செட்டிகுளத்தில் மின்மாற்றி அருகே தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chettikulam ,Nagercoil ,kalimani ,
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்