×

உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆறுமுகநேரி, மார்ச் 26: பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளி, வைரவன் நகரை சேர்ந்தவர் முனியசாமி(64). உப்பளத்தொழிலாளி. இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன், 2 மகள் உள்ளனர். முனியசாமி, கடந்த ஜனவரி மாதம் வீட்டிற்கு நடந்து வரும்போது கீழேவிழுந்து விட்டார். இதில் தலையில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(24ம் தேதி) இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கச் செல்வதாக கூறி சென்றுள்ளார். மறுநாள் காலையில் மகன் அழகுமுனீஸ்வரன் சென்று பார்த்தபோது முனியசாமி குடிசையில் உள்ள கம்பியில் வயரால் தூக்குப்போட்டு தொங்கியது தெரிய வந்தது. உடினயாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் எஸ்ஐ செல்வக்குமார் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Muniyaswamy ,Vairavan town ,Pullaveli ,Palayakayal ,Muniyasamy ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?