×

லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

லால்குடி, மார்ச் 23: லால்குடி அருகே தேர்தல் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.4.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோத்தாரி சர்க்கரை ஆலை பகுதியில் அழகுமுகில் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது திருச்சி நாகமங்கலத்தில் இருந்து லால்குடி காட்டூர் பகுதி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தபோது காட்டூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா லோகநாதன் உரிய ஆவணமின்றி ரூ.4 லட்சத்து50 ஆயிரத்து 810 பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் முருகன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப்துல்காதர், ரவிக்குமார், லால்குடி மண்டல துணை வட்டாட்சியர், விஏஓ வினோத், சிறப்பு காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

The post லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.4.50 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Lalgudi ,Agaumukhil ,Kothari ,Lalgudi, Trichy ,Dinakaran ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை