×

பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது

 

அரியலூர், மார்ச் 22: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ்ஐ ஆனந்தன் மற்றும் போலீசார் கல்லங்குறிச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன் மகன் முருகானந்தம்(34).காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத்குமார்(32) ஆகிய 2 பேரும் கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகே பொது இடம் என்றும் பார்க்காமல் பொதுமக்களுக்கு இடையூறாக அருவருக்கத்தக்க விதமாக தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் எச்சரித்தும் போகாமல் மீண்டும் திட்டிக் கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur District Khairlabhabad Police SI ,Anandan ,Kallangurichi ,Johnson ,Murukanandam ,Amman Kovil Street, Ariyalur ,Vinod Kumar ,Kaliyamman Kovil Street ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...